Feb 12, 2026
Thisaigal NewsYouTube
சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மலேசியாவில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள சுமார் 20 லட்சம் மக்கள், 'சும்பங்கன் அசாஸ் ரஹ்மா' எனும் SARA திட்டத்தின் 100 ரிங்கிட் நிதியுதவியை ஒரே நாளில் பெற்றுள்ளதாக இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வரை சுமார் 200 மில்லியன் ரிங்கிட் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இம்முறை தொழில்நுட்பக் கோளாறுகள் இன்றி, கடைகளில் நீண்ட வரிசைகள் இல்லாமல் முறைமை சிறப்பாகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த 100 ரிங்கிட் உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்படாது. பயனர்கள் தங்களின் மைகாட் அடையாள அட்டை மூலம் அங்கீகரிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Related News

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு

முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு

மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு

மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு