May 22, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை தொடங்குகிறது மாபெரும் சோதனை
தற்போதைய செய்திகள்

சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை தொடங்குகிறது மாபெரும் சோதனை

Share:

புத்ராஜெயா, ஜூலை 1-

கெந்திங் ஹைலண்ட்ஸி சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய சோதனை நடவடிக்கை தொடங்கப்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் செய்யக்கூடிய தவறுகளை கண்டபிடிப்பதற்கு இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்படும். நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை கெந்திங் ஹைலண்ட்ஸில் சுற்றுலா பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி தடம்புரண்டதில் இரண்டு சீன நாட்டுப் பிரஜைகள் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமுற்றனர்.

அந்த பேருந்தை செலுத்திய 32 வயது ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லையென்பது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் ஏற்கனவே 27 சம்மன்களை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

Related News