ராணுவக் கடற்படையின் கேடட் பயிற்சியாளர் ஜெ.சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் பல விஷயங்கள் கவனிக்கப்படவில்லை என்று பிரபல நோயியல் நிபுணர் டாக்டர் புபிந்தர் சிங், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சூசை மாணிக்கம் சவப் பரிசோதனை மேலோட்டமாக ஆராயப்பட்டுள்ளதே தவிர, கண்டிப்பாக ஆராய வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் ஆராயப்பட வில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ராணுவக் கடற்படையின் பயிற்சியாளரான சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், அவரின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு நடைபெற்று வரும் இவ்வழக்கில் தடயவியல், நோயியல் துறையில் கடந்த 26 ஆண்டு காலமாக அனுபவம் பெற்றுள்ள பினாங்கு மருத்துவமனையின் தடையவியல் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டர் புபிந்தர் சிங் சாட்சியமளித்தார்.
சூசை மாணிக்கத்தின் நுரை ஈரலில் நீர் கோர்துக்கொண்டதாக சவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எதனால் நீர் கோர்த்துக்கொண்டது என்பது குறித்து விளக்கப்படவில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி கடற்படைத் தளத்தில் நிகழ்ந்த பயிற்சியின் போது 27 வயதுடைய சூசை மாணிக்கம் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் நடைபெற்று வரும் இவ்வழக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


