May 1, 2026
Thisaigal NewsYouTube
சூசை மாணிக்கத்தின் சவப் பரிசோதனை
தற்போதைய செய்திகள்

சூசை மாணிக்கத்தின் சவப் பரிசோதனை

Share:

ராணுவக் கடற்படையின் கேடட் பயிற்சியாளர் ஜெ.சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் பல விஷயங்கள் கவனிக்கப்படவில்லை என்று பிரபல நோயியல் நிபுணர் டாக்டர் புபிந்தர் சிங், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சூசை மாணிக்கம் சவப் பரிசோதனை மேலோட்டமாக ஆராயப்பட்டுள்ளதே தவிர, கண்டிப்பாக ஆராய வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் ஆராயப்பட வில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ராணுவக் கடற்படையின் பயிற்சியாளரான சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில், அவரின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு நடைபெற்று வரும் இவ்வழக்கில் தடயவியல், நோயியல் துறையில் கடந்த 26 ஆண்டு காலமாக அனுபவம் பெற்றுள்ள பினாங்கு மருத்துவமனையின் தடையவியல் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டர் புபிந்தர் சிங் சாட்சியமளித்தார்.

சூசை மாணிக்கத்தின் நுரை ஈரலில் நீர் கோர்துக்கொண்டதாக சவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எதனால் நீர் கோர்த்துக்கொண்டது என்பது குறித்து விளக்கப்படவில்லை என்று டாக்டர் புபிந்தர் சிங் குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி கடற்படைத் தளத்தில் நிகழ்ந்த பயிற்சியின் போது 27 வயதுடைய சூசை மாணிக்கம் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் நடைபெற்று வரும் இவ்வழக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி