இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் ் சகோதரர் உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் ஷா ஆலாம் நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. அவ்விரு சகோதரர்கள் பயணித்த பிஎம்டபல்யூ கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 37 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் 32 வயது சகோதரர் காயங்களுடன் உயிர்தப்பினார் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் வான் முகமட் வான் ரஸாலி இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


