May 28, 2026
Thisaigal NewsYouTube
குடும்பப் பிரச்னையால் விளைந்த பழிவாங்கல் செயலே
தற்போதைய செய்திகள்

குடும்பப் பிரச்னையால் விளைந்த பழிவாங்கல் செயலே

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.24-

கடந்த மார்ச் 7 ஆம் தேதி பினாங்கு, தாசேக் குளுகோர், தாமான் செப்பாடு ஜெயாவில் ஓர் உணவகத்திற்கு வெளியே அதன் நிர்வாகியான ஒரு மியன்மார் பிரஜை, கும்பல் ஒன்றினால் துரத்திச் சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் அந்த நபருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையிலான முன்விரோதப் பழிவாங்கல் செயலே காரணமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செயப்பட்ட நபர், தாசேக் குளுகோரில் உள்ள அவரின் குடும்பம் மற்றும் அவர்களின் பூர்வீக நாட்டில் உள்ள குடும்பத்தினர் ஆகியோருக்கு இடையில் நிலவி வந்த குடும்பப் பிரச்னை, பகைமையாக மாறி, அவரைக் கொலை செய்யும் அளவிற்கு பழிவாங்கல் செயலாக உருவெடுத்துள்ளது என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

உணவகத்தின் முன் உள்ள பிரதானச் சாலையில், வாகனத்தில் வந்த முகமூடி கும்பல் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 க்கும் 40 க்கும் இடைப்பபட்ட வயதுடைய எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எண்மரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட வேளையில் பிரதான சந்தேகப் பேர்வழியைத் தாங்கள் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது