May 28, 2026
Thisaigal NewsYouTube
உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்
தற்போதைய செய்திகள்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

Share:

உணவு விநியோக ஊழியர் ஒருவர் மீது சூப் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஃபேமிலிமார்ட் மலேசியா நிறுவன ஊழியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஃபேமிலி மார்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடைகளில், யாரிடமும், மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது ஒழுங்கீனமான நடத்தையை நிர்வாகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக உள்விசாரணை நடைபெற்று வருவதால், அந்த ஊழியர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டஃபேமிலி மார்ட் ஊழியருக்கும். உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத காணொளியானது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், ஃபேமிலி மார்ட் நிர்வாகம் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அக்காணொளியில் உள்ள தகவலின் படி, இச்சம்பவமானது, கோத்தா டமன்சாராவிலுள்ள தி கோர் வணிக வளாகத்திலுள்ள ஃபேமிலி மார்ட் கடையில் நடந்ததாக நம்பப்படுகின்றது.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு