உணவு விநியோக ஊழியர் ஒருவர் மீது சூப் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட ஃபேமிலிமார்ட் மலேசியா நிறுவன ஊழியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஃபேமிலி மார்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடைகளில், யாரிடமும், மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது ஒழுங்கீனமான நடத்தையை நிர்வாகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக உள்விசாரணை நடைபெற்று வருவதால், அந்த ஊழியர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டஃபேமிலி மார்ட் ஊழியருக்கும். உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத காணொளியானது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், ஃபேமிலி மார்ட் நிர்வாகம் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அக்காணொளியில் உள்ள தகவலின் படி, இச்சம்பவமானது, கோத்தா டமன்சாராவிலுள்ள தி கோர் வணிக வளாகத்திலுள்ள ஃபேமிலி மார்ட் கடையில் நடந்ததாக நம்பப்படுகின்றது.








