May 25, 2026
Thisaigal NewsYouTube
குளத்தில் பிணமாக கிடந்த மாற்றுத் திறனாளி
தற்போதைய செய்திகள்

குளத்தில் பிணமாக கிடந்த மாற்றுத் திறனாளி

Share:

கேமாமன்,செப்டம்பர் 30-

கடந்த இரண்டு நாளாக காணவில்லை என்று தேடப்பட்டு வந்த ஒரு மாற்றுத் திறனாளியான முதியவர் ஒருவர், தண்ணீர் குளத்தில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திரெங்கானு, கெமாமன், கம்போங் பமன், என்ற இடத்தில் 65 வயதுடைய அந்த முதியவர் இறந்து கிடந்ததாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

தனது வீட்டிலிருந்த 100 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த முதியவரின் உடலில் காயம் ஏதும் இல்லை. இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News