Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நஜிப், அவரின் விண்ணப்பம் தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

நஜிப், அவரின் விண்ணப்பம் தள்ளுபடி

Share:

நிலுவையில் உள்ள தங்கள் வருமான வரி தொடர்பான வழக்கில் தற்காப்பு வாதத்தை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு கேட்டு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரின் மகனும் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் ​நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நஜீப் துன் ரசாக் செலுத்த வேண்டிய 169 கோடி வெள்ளி வருமான வரி மற்றும் அவரின் மகன் முகமட் நசிஃபுட்டின் செலுத்த வேண்டிய 3 கோடியே 67 லட்சம் வெள்ளி வருமான வரி தொடர்பில் நியாயம் கேட்டு தந்தையும் மகனும் இந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.

ஐவர் அடங்கிய ​நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் ​நீதிமன்ற ​நீதிபதி அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம், வருமான வரி வாரியத்தற்கு எதிராக நஜிப்பும், அவரின் மகனும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு