தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு கார் ஒன்றை துரத்திக்கொண்டு சென்ற மூன்று நபர்களில் இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 41.5 ஆவது கிலோ மீட்டரில் கூலாய், செடேனாக் அருகில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில், 43 மற்றும் 48 வயதுடைய இரு உள்ளூர் ஆடவர்களை குலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமரூல் ஸமான் மாமாட் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸை நோக்கி ஆடவர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூன்று நபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அந்த காரை துரத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


