தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு கார் ஒன்றை துரத்திக்கொண்டு சென்ற மூன்று நபர்களில் இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 41.5 ஆவது கிலோ மீட்டரில் கூலாய், செடேனாக் அருகில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில், 43 மற்றும் 48 வயதுடைய இரு உள்ளூர் ஆடவர்களை குலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அகமரூல் ஸமான் மாமாட் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸை நோக்கி ஆடவர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூன்று நபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அந்த காரை துரத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்


