Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பிறை டோல் சாவடிச் சம்பவம்: குற்றத்தை மறுத்த உணவக உரிமையாளர் விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

பிறை டோல் சாவடிச் சம்பவம்: குற்றத்தை மறுத்த உணவக உரிமையாளர் விசாரணை கோரினார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.07-

கடந்த வாரம் பிறை டோல் சாவடியில், தனது காரை மோதி, மருத்துவர் ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், உணவக உரிமையாளர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், 32 வயதான கோர் வெய் யியாக் என்ற அந்த ஆடவர், நீதிபதி நூருல் ரஷிடா முஹமட் அகிட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ், விசாரணை செய்யப்பட்டு வரும் இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், செபராங் பிறை தெங்காவிலுள்ள பிறை டோல் சாவடி அருகே இச்சம்பவம் நடந்ததாக, பாதிக்கப்பட்ட அவினாஷ் என்ற மருத்துவர் சார்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

டோல் சாவடியின் தடுப்பு திறக்காத நிலையில், கோரின் காரைப் பின்னால் நகர்த்துமாறு அவினாஷ் கேட்டுக் கொண்டதில் ஏற்பட்ட தகறாரில், அவினாஷை மோதித் தள்ளும் எண்ணத்தோடு, கோர் தனது காரைச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில், வரும் மார்ச் 4-ஆம் தேதிக்குள், மருத்துவச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்