நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விசாகத் தின கொண்டாட்டங்கள் மற்றும் பிரம்மாண்ட ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கவும், ட்ரோன்களை பறக்கவிடவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது 1957 ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து வாரியத்தின் அனுமதியின்றி ட்ரோன்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றங்கள் நடப்பதைத் தவிர்க்க பொதுமக்கள் ஆடம்பர நகைகளை அணிவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் பொதுப் போக்குவரத்தை நாடுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








