கிளாந்தான், தும்பாட் அருகே 10 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு வீடு ஒன்றிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், ஒரு உள்ளூர் இளைஞரும் 9 வங்காளதேச சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் பொது பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் அந்த காரை நிறுத்த முயன்றபோது, அதன் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
விசாரணையில், மலேசியா-தாய்லாந்து எல்லையிலிருந்து தலா 100 ரிங்கிட் பணத்தைப் பெற்றுக் கொண்டு கோத்தா பாருவிற்கு இவர்களைக் கொண்டு வர முயன்றதை 21 வயது ஓட்டுநர் ஒப்புக்கொண்டுள்ளார். முறையான ஆவணங்கள் இன்றி பயணித்த 20 முதல் 55 வயதுக்குட்பட்ட அந்த 9 வங்காளதேசிகளும் விசாரணைக்காகக் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.








