Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது

Share:

ஜோகூர்பாரு, பிப்ரவரி 24 -

பதிமூன்று வயது சிறுவன் காரோட்டிச் செல்வது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாகனத்தையும், அதன் உரிமையாளரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் 25 வயது நபர், அடையாளம் காணப்பட்டு, சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் டாயா வில் உள்ள ஒரு விளையாட்டுப் பூங்காவின் சாலையில் 13 வயது சிறுவனுக்கு காரோட்டும் பயிற்சியை அந்த நபர் அளித்துக்கொண்டு இருந்த போது அந்த காணொளி பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது என்று ரௌப் செலாமாட் குறிப்பிட்டார்.

எனினும் மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு பொது இடத்தில் வயது குறைந்த சிறுவனுக்கு காரோட்டும் பயிற்சியை கற்றுக் கொடுத்து குற்றத்திற்காக அந்த நபருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு