கோலாலம்பூர், நவ. 13-
தன்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த ஐந்து வயது சிறுவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக நீச்சல் பயிற்றுநர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
எங் குவான் ஹோ என்ற அந்த 27 வயதுடைய நீச்சல் பயிற்றுநகர், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல், தாமான் ஸ்ரீ பிந்தாங்கில் உள்ள நீச்சல் பள்ளியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆ ண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறால் பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நீச்சல் பயிற்றுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








