கோலாலம்பூர், ஜூலை 13-
மோசடி குற்றச்சாட்டு ஒன்றை தொடராமலிருப்பதற்காக, 20 ஆயிரம் வெள்ளி கையூட்டை கோரியது, பெற்றது தொடர்பான சந்தேகத்தின் பேரில், அமலாக்கத் தரப்பின் ஓர் அதிகாரி மற்றும் இரு உறுப்பினர்களை, கோலாலம்பூர்ருக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது.
30 வயது மதிக்கத்த அதிகாரியான ஆடவரை, நாளை வரையிலும் 20 வயது மதிக்கத்த பெண் உறுப்பினரை இன்று வரையிலும், 30 வயது ஆண் உறுப்பினரை, வருகின்ற 15ஆம் தேதி வரையிலும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு, புத்ரஜெயா மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மோசடி குற்றத்திற்காக கடந்த 8ஆம் தேதி தடுத்துவைக்கப்பட்டிருந்த தமது மனைவியை விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்த புகார்தாரரிடம், அம்மூவரும், அத்தொகையை பெற்றுள்ளது தொடக்ககட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








