May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் சிவராத்திரி விழா

Share:

சிரம்பான், பிப்.19-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபார் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மூன்று நாட்களுக்கு முன்னரே வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 7.31 மணிக்கு சிவபுராணம் பாராயணம் நடைபெறவிருக்கிறது.

100 பேர் சேர்ந்து 10 முறை சிவபுராணம் பாராயணம் செய்வர். திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகள் தலைமையில் சிவபுராண பாராயணம் நடைபெறும்.

பக்த பெருமக்கள் சிவபுராண பாராயணத்தில் கலந்து கொண்டு ஈசனின் அருள்பெற வேண்டி, ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மஹாசிவராத்திரி அன்று 4 கால பூஜையிலும் யாகத்திலும் பூஜிக்கப்படும் சங்குகளை தலா 25 ரிங்கிட் செலுத்தி பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேல் விபரங்களுக்கு 017-3225400.

Related News