May 5, 2026
Thisaigal NewsYouTube
மானிய  சமையல் எண்ணெய் இனி மலேசியர்களுக்கு மட்டுமே! வெளிநாட்டினருக்குத் தடை - மார்ச் 1 முதல் அமல்
தற்போதைய செய்திகள்

மானிய சமையல் எண்ணெய் இனி மலேசியர்களுக்கு மட்டுமே! வெளிநாட்டினருக்குத் தடை - மார்ச் 1 முதல் அமல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

மலேசியாவில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் மானிய விலையிலான பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்கத் தடை விதிக்கப்படும் என உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்மிஸான் முஹமட் அலி அறிவித்துள்ளார்.

1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இதற்கான புதிய விதிமுறைகள் வாக்கப்பட்டு, eCOSS எனும் டிஜிட்டல் கண்காணிப்பு முறை மூலம் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

இந்த eCOSS செயலி மூலம் விநியோகச் சங்கிலி முழுவதும் கண்காணிக்கப்பட்டு, கடத்தல் மற்றும் முறைகேடுகள் தடுக்கப்படும். கடந்த 2025 மே மாதம் முதல் புத்ராஜெயா மற்றும் ஜோகூர் போன்ற பகுதிகளில் இந்த முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

முதியவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காகச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தி எண்ணெய் வாங்கும் வகையில் இத்திட்டம் மைகாசே தளத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள மலேசியர்களுக்கு மட்டுமே மானியத்தின் பலன் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று டத்தோ ஶ்ரீ அர்மிஸான் தெளிவுபடுத்தினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மானிய சமையல் எண்ணெய் இனி மலேசியர்களுக்கு மட்டுமே! வெளிநா... | Thisaigal News