Jan 29, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள உடம்புப்பிடி நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வார கண்காணிப்பிற்குப் பிறகு, கோலாலம்பூர் மற்றும் பூச்சோங்கில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

அழகு நிலையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள் என்ற பெயரில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் அவ்விடங்களில் இருந்து, 12 பிலிப்பைன்ஸ் பெண்கள், 6 வியட்நாம் பெண்கள் மற்றும் ஒரு மங்கோலியப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இது போன்ற சட்டவிரோதச் சேவைகள் குறித்து வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் இரகசியமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்ததாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா தலைமையகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

Related News

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு

ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச... | Thisaigal News