Jan 29, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.29-

இந்தியாவில் அதிகரித்து வரும் நிபா வைரஸ் தொற்று காரணமாக, மலேசியாவில் சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவின் அனைத்துலக குடிநுழைவு வாயில்களில் செயல்பட்டு வரும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ், நிபா வைரஸ் தொற்றுக்குக் காரணமான அதிக ஆபத்துள்ள விலங்குகள் தொடர்பான பொருட்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், மலேசியாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கும், பல்வேறு துறைகள் மற்றும் முகமைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் நிபா நோயின் எந்தவொரு பாதிப்பும் பதிவாகவில்லை என்ற போதிலும், மற்ற பல நாடுகளில் அவ்வப்போது பதிவாகும் நோய்த் தொற்றுகளைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பரவல் ஏற்படும் அபாயத்திற்கு எதிராக சுகாதார அமைச்சு தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு

ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது