Jan 29, 2026
Thisaigal NewsYouTube
ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

ஈரானில் போதைப் பொருள் கடத்தலுக்காக தண்டனை பெற்ற இரு மலேசியப் பெண்கள் உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

13 ஆண்டுகளுக்கு முன்பு, போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மலேசியப் பெண்கள், தாங்கள் அளவுக்கு அதிகமான தண்டனைகளை அனுபவித்து விட்டதாகக் கூறி மலேசிய உள்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு, போதைப் பொருள் வைத்திருந்ததற்காக Tehran-னில் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும், அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் தண்டனை விதித்தது.

அப்பெண்களின் ஜப்பான் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளைச் செய்த ‘மாதவன்’ என்ற முகவர், பை ஒன்றைக் கொடுத்ததாகவும், அதில் போதைப் பொருட்கள் இருந்தது அப்பெண்களுக்குத் தெரியாது என்றும் அவர்களின் வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tehran-இல் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட போது, அவர்களில் ஒரு பெண்ணுக்கு 14 வயது என்றும், அவரது உறவினருக்கு 47 வயது என்றும் மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, சர்வதேச கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், 102 ஈரானிய கைதிகளுக்குப் பதிலாக மலேசியாவிற்கு அனுப்பப்பட்ட அவ்விரு பெண்களும், கடந்த 12 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சர்வதேச கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் பிரிவு 18(A)-வின் படி, அத்தகைய கைதிகளுக்கு பிணை, பொது மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு அல்லது தண்டனை மாற்றம் உள்ளிட்டவைகள் மறுக்கப்படக்கூடாது என்றும் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது 26 வயதாகும் அந்த இளம் பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருவருக்கும் பிணை வழங்க வேண்டும் என்றும் மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிராக மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது

கிள்ளான் பள்ளத்தாக்கில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடிச் சோதனை - 19 பெண்கள் கைது

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ் காரணமாக மலேசிய எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

செந்துல் அடுக்குமாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் ஆய்வகம் - சீனாவைச் சேர்ந்த தம்பதி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது

150,000 ரிங்கிட் லஞ்சம்: ராணுவ உயர் அதிகாரி அதிரடி கைது