May 5, 2026
Thisaigal NewsYouTube
வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி
தற்போதைய செய்திகள்

வரவிருக்கும் புதிய சட்டங்கள் தீங்கு விளைவிக்கும் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தும்: அமைச்சர் உறுதி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தேகத்திற்குரிய முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் காணொளிகள் முதல், பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நூர்ஹாலிஸா தாருடின் நன்கொடைகளைக் கோரும் காணொளிகள் வரை, மலேசியாவில் தற்போது deepfake எனப்படும் போலியான காணொளிகள் இணையத்தில் உலா வருகின்றன.

மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிமின் புகைப்படங்கள் கூட இந்த deepfake காணொளிகளில் இருந்து தப்பவில்லை.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் கோரிக்கையின் பேரில், இணையவெளியில் இருந்து சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் deepfake, மோசடி உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அதே வேளையில், கடந்த 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், இணையவழி மற்றும் நிதி மோசடிகள் மூலம் சுமார் 5.62 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 2.77 பில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது.

உள்துறை அமைச்சின் தகவலின் படி, இந்தத் தொகையானது தொலைபேசி, காதல் மோசடிகள், இணையவழி வர்த்தகக் குற்றங்கள், இணைய நிதி மோசடிகள் உள்ளிட்டவையாகும்.

இந்நிலையில், எதிர்வரும் செயற்கை நுண்ணறிவு ஆளுகைச் சட்டம், செயற்கை நுண்ணறிவு உற்பத்தியில் பாதுகாப்பு அம்சங்களைக் கையாளும் ஓர் ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிறுவப்பட்ட நெறிமுறைக் கோட்பாடுகளிலிருந்து, தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்கள் உருவாவதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இச்சட்டத்தில் இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்