கோலாலம்பூர் மாநகரில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கனத்த மழையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்துள்ளன. இதனால் 18 வாகனங்கள் சேதமுற்றதாக அறிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய இந்த கனத்த மழையில் அவசர உதவிக் கேட்டு, MERS 999 மையம் அதிகமான தொலைபேசி அழைப்புகளை பெற்றுள்ளது.
கோலாலம்பூர் மையப்பகுதியில் வீற்றிருக்கும் ஜாலான் கம்போங் அத்தாப், ஜாலான் சுல்டான் இஸ்மாயில், தாமான் புக்கிட் அங்காசா, பெஜாபாட் கெசேஹாத்தா கெப்போங், ஜாலான் ஆயர் ஜெர்னே மற்றும் ஃபிலேட் வங்சா மாஜூ ஆகிய பகுதிகளில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை துறையின் செயலாக்க மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


