கோலாலம்பூர் மாநகரில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கனத்த மழையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்துள்ளன. இதனால் 18 வாகனங்கள் சேதமுற்றதாக அறிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய இந்த கனத்த மழையில் அவசர உதவிக் கேட்டு, MERS 999 மையம் அதிகமான தொலைபேசி அழைப்புகளை பெற்றுள்ளது.
கோலாலம்பூர் மையப்பகுதியில் வீற்றிருக்கும் ஜாலான் கம்போங் அத்தாப், ஜாலான் சுல்டான் இஸ்மாயில், தாமான் புக்கிட் அங்காசா, பெஜாபாட் கெசேஹாத்தா கெப்போங், ஜாலான் ஆயர் ஜெர்னே மற்றும் ஃபிலேட் வங்சா மாஜூ ஆகிய பகுதிகளில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை துறையின் செயலாக்க மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


