Apr 17, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்
தற்போதைய செய்திகள்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

Share:

பேரா மாநிலத்தில் கோப்பெங் மற்றும் பங்கோர் ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய தமிழ்ப்பள்ளிகள் 22 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று கோப்பெங்கில் உள்ள R.T.C. . மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர கழகத்தின் 32 ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய அவர், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். அதேவேளையில் அவர்கள் நல்கி வரும் ஒத்துழைப்பும் பாராட்டாத்தக்கது. அத்தகை ஆசிரியர் பெருந்தகைகள் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு சமூகம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று டத்தோ சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் நடவடிக்கைகளுக்காக 40,000 ரிங்கிட் மானியத்தை டத்தோ சிவநேசன் அறிவித்தார்.

முன்னதாக, தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஜெயகுமார் சபாபதி, மாநில அரசின் ஆதரவுக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தெரிவித்தார்.

தலைமையாசிரியர்கள் திரளாக கலந்து கொண்ட கலந்துரையாடலுடனான இந்த ஆண்டுக்கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற 11 தலைமையாசிரியர்கள் சிறப்புச் செய்யப்பட்டனர்.

Related News

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு