வங்கி ஒன்றில் சிலரது சேமிப்புக் கணக்கிலிருந்து மொத்தம் 24.2 மில்லியன் வெள்ளி காணாமல் போன சம்பவத்தை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்டவர்களின் பணம் உடனடியாக திரும்பி செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வங்கி நிறுவனங்கள் மற்றும் சிண்டிகேட்டுகள் சம்பந்தப்பட்ட இக்கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து புகார்களையும் தமது தரப்பு கருத்தில் எடுத்துக் கொள்வதாக மலேசிய பேங்க் நெகாரா ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் நான்கு வங்கி ஊழியர்கள் உட்பட மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு உட்பட சேமிப்பு கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை பாதுகாப்பதற்கு அனைத்து வங்கி நிறுவனங்களும் வலுவான கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று மலேசிய பேங்க் நெகாரா வலியுறுத்தியுள்ளது.








