ஆசிரியர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்களின் அலவன்ஸ் தொகையை உயர்த்துவது, அரசாங்கத்தின் முக்கிய கவனமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று மலாக்கா, ஆயர் குரோவில் மலாக்கா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான கூடுதல் அனுகூலத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு ஆசிரியர் பெருந்தகைகளை அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


