May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியும் காரும் மோதியது: இருவர் உயிரிழந்தனர்

Share:

சிரம்பான், பிப்.3-

சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் tanker லோரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் அந்த விரைவு நெடுஞ்சாலையின் 27.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 21 வயது கார் ஓட்டுநரும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது பயணி ஒருவரும் உயிரிழந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த 26 வயது பயணி கடும் காயங்களுக்கு ஆளானார்.

அவர்கள் போர்ட்டிக்சனை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Related News