ஈப்போ , ஜூலை 22-
பேராக், கிந்தா- வில் வீட்டின் வரவேற்பறையில் உறங்கிக் கொண்டிருந்த தமது நண்பரின் 12 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பணி ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவருக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறையும், ஒரு பிரம்படித் தண்டனையும் விதித்தது.
42 வயதுடைய அந்த முன்னாள் வீரர், கடந்த மார்ச் 28-ஆம் தேதி அதிகாலை 3 மணி வாக்கில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த நபருககு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ஹில்மியா யூசோஃப் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கினார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.








