கடந்த நான்கு ஆண்டுகளில் ஜோகூர் மாநிலம் 272 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 110 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளைப் பெற்று, மலேசியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக ஜோகூர் வரலாறு படைத்துள்ளது என்று துங்கு இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் வருவாய் 2025-இல் 2.68 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற வியூகப்பூர்வ திட்டங்களே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று இன்று ஜோகூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் துங்கு இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.








