Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுல்தான் இஸ்கண்டார் கட்டடச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகமோட்டிகள் சண்டையிட்டுக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

சுல்தான் இஸ்கண்டார் கட்டடச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகமோட்டிகள் சண்டையிட்டுக் கொண்டனர்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.29-

ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டட குடிநுழைவு, சுங்கம், நோய்த் தடுப்புச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனமோட்டிகள் கைகலப்பில் ஈடுபட்ட காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த சோதனைச் சாவடியில் பேருந்துகள் செல்வதற்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தடத்தில் எதிர்த்திசையில் டொயோட்டா வெல்ஃபியர் வாகனம் சென்றதால், இந்த கைகலப்புக்கு காரணம் என்று ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

இந்தச் சண்டையில் 28 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநரும், பேருந்து ஓட்டுநரும் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

டொயோட்டா வெல்ஃபியர் வாகனத்தைப் பயன்படுத்திய இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு பேருந்துக்காரர் வழிவிடத் தவறி விட்டார் என்று கூறி, சண்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சினமூட்டும் சொற்களை இருவரும் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இரண்டு பேருமே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சொற்பக் காயங்களுக்கு ஆளாகினர். பின்னர் இருவரும் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர் என்று ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்