Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குதிரை ஒன்று வாகனத்தினால் மோதப்பட்டு உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

குதிரை ஒன்று வாகனத்தினால் மோதப்பட்டு உயிரிழந்தது

Share:

சிலாங்கூர், செலாயாங், ஜாலான் சுங்ஙை துவா - உலுயாம் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் குதிரை ஒன்று, Ford Ranger வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டது. 54 வயது நபர் செலுத்திய அந்த வாகனம், அந்தாரா காப்பியிலிருந்து ஶ்ரீ கோம்பாக்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலையை கடந்ததாக கூறப்படும் அந்த கு​திரையை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போ​லீஸ் தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் தெரிவித்தார்.

அந்த காட்டுப்பாதையில் குதிரை எங்கிருந்து வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில் அந்த குதிரையின் உரிமையாளர் யாரும் இருக்கிறார்களா என்பது குறி​த்தும் ஆராயப்ப்டடு வருவதாக அவர் மேலும் கூறினார். இந்த விபத்து 1950 ஆம் ஆண்டு போக்குவர​த்து வழிமுறைச் சட்டத்தின் பத்தாவது விதியின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக நோர் அரிஃபின் முஹமாட் குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு