Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாம் ஏரிப்பூங்காவில் மீண்டும் முதலையா?
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாம் ஏரிப்பூங்காவில் மீண்டும் முதலையா?

Share:

ஷா ஆலம், அக்டோபர் 05-

ஷா ஆலாம், செக்‌ஷன் 7 இல் வீற்றிருக்கும் ஷா ஆலாம் ஏரிப்பூங்காவில் மீண்டும் முதலை தலைகாட்டத் தொடங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலான தகவலை சிலாங்கூர் மாநில தேசிய வனவிலங்குப் பூங்கா பாதுகாப்புத்துறை இயக்குநர் வான் முகமது அடிப் வான் முகமட் யூசோ மறுத்துள்ளார்.

நேற்று காலை 10.00 மணியளவில் அதிகாரிகள் அங்கு விரிவான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் முதலை இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியோ, தடயமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விரிவான சோதனையில், அந்த ஏரிப்பூங்காவில் தூண்டிலில் மீன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள பொது மக்களிடம் கேட்ட போது, முதலை நடமாட்டத்திற்கான எந்தவொரு தடயமும் காணப்படவில்லை என்று எதிர்வினையாற்றியுள்ளதாக என்று அவர் விளக்கினார்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 4 ஆம் அந்த ஏரிப்பூங்காவில் இரவு 10.20 மணியளவில் 20 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று பிடிபட்டதைத் தொடர்ந்து தற்போது புதியதாக பீதி கிளப்பப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும் அந்த ஏரிப்பூங்காவில் உடும்பு இருப்பதற்கான சாத்தியத்தை வான் முகமது அடிப் மறுக்கவில்லை.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு