Mar 18, 2026
Thisaigal NewsYouTube
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் என் கணவருக்கு ஈடாகாது – ரேய்மண்ட் கோ மனைவி வருத்தம்!
தற்போதைய செய்திகள்

எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் என் கணவருக்கு ஈடாகாது – ரேய்மண்ட் கோ மனைவி வருத்தம்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன வழக்கில், நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைக் கேட்ட அவரின் மனைவி Susanne Liew, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் தனது கணவருக்கு ஈடாகாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், தனது கணவர் காணாமல் போன சம்பவத்தில், சட்டத்தை மீறியவர்கள் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தீர்ப்பு தனக்கு கலவையான உணர்வுகளைத் தருவதாகவும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், தனது கணவரைத் திரும்பக் கொண்டு வர முடியாது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாகக் கூறி தனது கணவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்ததை Liew நினைவு கூர்ந்தார்.

துப்பாக்கித் தோட்டாக்கள் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை அஞ்சலில் அனுப்பி தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை