Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.07-

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாளில் சுபாங் ஜெயா மற்றும் செர்டாங் வட்டாரத்தில் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் 25.15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 223.5 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை சிலாங்கூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது மூலம் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

இந்த இரண்டு கும்பல்கள் முறியடிக்கப்பட்டது மூலம் 30 க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 உள்ளூர் ஆடவர்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.

வீடு ஒன்று முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வோக்ஸ்வேகன் காரில் இருந்த மூன்று நபர்களைச் சிலாங்கூர் போலீசார் கைது செய்தது மூலம் அடுத்த நான்கு நபர்கள் பிடிபட்டதுடன் மிகப் பெரிய அளவில் போதைப் பொருளைக் கைப்பற்ற முடிந்ததாக அவர் விளக்கினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி