Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பத்து லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

பத்து லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம்

Share:

வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் கிழக்கு கரைமாநிலங்களின் நெடுஞ்சாலைகளை சுமார் பத்து லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை மற்றும் லெபோராயா பந்தாய் திமூர் ஃபசா 1 ஆகிய நெடுஞ்சாலைகளை அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும். கடந்த ஆண்டை விட இம்முறை வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கிழக்கு கரை மாநிலங்களின் பிரதான நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

Related News