தாய்லாந்தில் மருத்துவ நோக்கங்களுக்காக பயிரிட அனுமதிக்கப்பட்ட கெத்தும் இலைகள், அந்நாட்டில் மலேசியாவின் விலைக்கு விற்கப்பட முடியவில்லை என்றும் 200 சதவீதம் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு கிலோகிராம் கெத்தும் இலைகள் 180 வெள்ளிக்கு விற்கபட்ட வேளையில் இப்பொழுது 30 வெள்ளி மட்டுமே விற்பனை செய்ய முடிவதோடு பெர்லிஸ் மாநிலத்தில் 10 வெள்ளிக்கு மட்டுமே ஒரு கிலோ கெத்தும் இலைகள் விற்கப்படுகின்றன.
தாய்லாந்து அரசாங்கம் கெத்தும் இலைகள் மலேசியாவிலிருந்து அந்நாட்டிற்கு கடத்தப்படுவதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையாக கருதுவதாக பெர்லிஸ் போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.
கெத்தும் இலைகள் தாய்லாந்தில் விலை மதிப்பற்றவையாக இருந்தாலும் உள்நாட்டில் இன்னும் விற்பனை ஆகுவதாகவும் பெரும்பாலோர் வாங்குவதாகவும் டத்தோ முஹமாட் கூறினார்.








