மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ் ஹரூன் ஆகியோரின் பணி ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்கள் கடமைகளை மனநிறைவு அளிக்கும் வகையில் ஆற்றி வருகின்றனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீனால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். அவர்கள் மீது முதலில் பிரச்னைகள் எழுப்பட்டாலும், நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போது அவர்களின் பணியைக் கண்டறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் கடமைகளை திருப்திகரமாக செய்கின்றனர் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
தவிர அஸாம் பாக்கி அச்சப்படாமலும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு நல்ல உதாரணம், அமைச்சர் அலுவலகத்திலேயே ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது என்று அன்வார் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


