Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அஸாம் பாக்கி, இட்ருஸ் ஹரூண் ஆகியோரின் பணிகளில் மனநிறைவு
தற்போதைய செய்திகள்

அஸாம் பாக்கி, இட்ருஸ் ஹரூண் ஆகியோரின் பணிகளில் மனநிறைவு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ் ஹரூன் ஆகியோரின் பணி ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்கள் கடமைகளை மனநிறைவு அளிக்கும் வகையில் ஆற்றி வருகின்றனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீனால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். அவர்கள் மீது முதலில் பிரச்னைகள் எழுப்பட்டாலும், நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போது அவர்களின் பணியைக் கண்டறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் கடமைகளை திருப்திகரமாக செய்கின்றனர் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

தவிர அஸாம் பாக்கி அச்சப்படாமலும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு நல்ல உதாரணம், அமைச்சர் அலுவலகத்திலேயே ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது என்று அன்வார் விளக்கினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்