மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ் ஹரூன் ஆகியோரின் பணி ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்கள் கடமைகளை மனநிறைவு அளிக்கும் வகையில் ஆற்றி வருகின்றனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீனால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். அவர்கள் மீது முதலில் பிரச்னைகள் எழுப்பட்டாலும், நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போது அவர்களின் பணியைக் கண்டறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் கடமைகளை திருப்திகரமாக செய்கின்றனர் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
தவிர அஸாம் பாக்கி அச்சப்படாமலும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு நல்ல உதாரணம், அமைச்சர் அலுவலகத்திலேயே ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது என்று அன்வார் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


