Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாதுவை மேல்முறையீடு நீதிமன்றம் விடுதலை செய்தது
தற்போதைய செய்திகள்

மாதுவை மேல்முறையீடு நீதிமன்றம் விடுதலை செய்தது

Share:

இலங்கைப் பிரஜை ஒருவரை மலேசியாவிலிருந்து கடத்தியதற்காக கடந்த மூன்று ஆண்டு காலமாக சிறையில் இருந்து வரும் மாது ஒருவரை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

எம். சித்தாரா என்ற அந்த மாதுவிற்கு விதிக்கப்பட்டுள்ள பத்து ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்வதற்கு அவர் செய்து கொண்டுள்ள வழக்கு மனுவில் தகுதிபாடு உள்ளதாக கூறி மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற நீதிபதி கமாலுடீன் சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

42 வயதான சித்தாரா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு இலங்கைப் பிரஜையான ஷயாந்தினி தெய்வாந்திரன் என்பவரை மலேசியாவிலிருந்து வெளியேற்றி, ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிள்ளான் உயர் நீதிமன்றத்தினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

Related News