Aug 9, 2026
Thisaigal NewsYouTube
மாசிமகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

மாசிமகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் மாசிமகம் உபயத்தாரின் மாசிமகத் திருவிழா மற்றும் இரத ஊர்வலம், நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.

மாலை 5.00 மணிக்கு பத்துமலை திருத்தலத்தில், சுவாமி மண்டபத்தில் ஸ்ரீ கணேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமாள் எழுந்தருளி, மாலை மணி 6.00 க்கு சிறப்பு பூஜைகளுடன் மங்கள வாத்தியங்களுடன் பத்துமலைத் திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட ரதம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.

ரத ஊர்வலத்தில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என் சிவகுமார் உட்பட உபய பிரதிநிதிகள் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக, பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவரும், மாசிமக உபய நாட்டாண்மையும், அறங்காவலருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் உபய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ கணேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜுப் பெருமாள் எழுந்தருளிய ரதம், பத்துமலைத் திருத்தலத்திலிருந்து, Jalan MRR2, Jalan Sri Batu Caves, ஜாலான் செந்தூல் பாசா வழியாக பக்த பெருமக்களுக்கு அருள்பாலித்த வண்ணம் 12 சாலைகள் வாயிலாக தாய் கோவிலை சென்றடைந்தது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து