May 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வெளிநாட்டு பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வெளிநாட்டு பிரஜைகள் கைது

Share:

அம்பாங், ஜூன் 25-

அம்பாங், கம்போங் அம்பாங் இண்டா -வில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து கொள்ளையடித்து சென்ற குற்றத்திற்காக 3 வெளிநாட்டு ஆண்கள் உட்பட ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 24 ஆம் தேதி இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, 23 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய சந்தேகிக்கும் நபர்கள் அம்பாங், கம்போங் தாசெக் பெர்மை-யிற்கு அருகே கைது செய்யப்பட்டதாக முகமது அசாம் கூறினார்.

மேலும், கைது செய்யப்பட்ட அந்நபர்களிடமிருந்து இரண்டு கைத்தொலைப்பேசிகள், மடிகணினி, நான்கு கடிகாரங்கள் உட்பட சில ஆடைகளும் கைப்பற்றப்பட்டதாக முகமது அசாம் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 457 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அந்நபர்கள் அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகமது அசாம் குறிப்பிட்டார்.

Related News