ஒரு விவசாய நாடான மலேசியாவில் தேசிய காரான புரோட்டோனை அறிமுகப்படுத்தி, நாட்டின் சொந்த கார் தாயரிப்பு தொழிற்சாலைக்கு வழிகோலிட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கோலாலம்பூர் MATIC மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Perusahaan Otomobil Nasional Berhad நிறுவனத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். துன் மகாதீன் பெயரை பிரதமர் உச்சரித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. புரோட்டோன் நிறுவனத்தின் இந்த 40 ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி அந்த தேசிய கார் நிறுவனத்தின் புதியத் தயாரிப்பான Proton X90 ரக காரை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


