ஒரு விவசாய நாடான மலேசியாவில் தேசிய காரான புரோட்டோனை அறிமுகப்படுத்தி, நாட்டின் சொந்த கார் தாயரிப்பு தொழிற்சாலைக்கு வழிகோலிட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கோலாலம்பூர் MATIC மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Perusahaan Otomobil Nasional Berhad நிறுவனத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். துன் மகாதீன் பெயரை பிரதமர் உச்சரித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. புரோட்டோன் நிறுவனத்தின் இந்த 40 ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி அந்த தேசிய கார் நிறுவனத்தின் புதியத் தயாரிப்பான Proton X90 ரக காரை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


