ஒரு விவசாய நாடான மலேசியாவில் தேசிய காரான புரோட்டோனை அறிமுகப்படுத்தி, நாட்டின் சொந்த கார் தாயரிப்பு தொழிற்சாலைக்கு வழிகோலிட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கோலாலம்பூர் MATIC மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Perusahaan Otomobil Nasional Berhad நிறுவனத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். துன் மகாதீன் பெயரை பிரதமர் உச்சரித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. புரோட்டோன் நிறுவனத்தின் இந்த 40 ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி அந்த தேசிய கார் நிறுவனத்தின் புதியத் தயாரிப்பான Proton X90 ரக காரை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


