கூலாய், ஆகஸ்ட்.03-
ஜோகூர் மாநிலம், Senai பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரை அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee கூறுகையில், 26 மற்றும் 30 வயதுடைய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Iskandar Puteri, Forest City பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை Senai அனைத்துலக விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் மேம்பாலம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 செண்டிமீட்டர் நீளமுடைய அரிவாளை பறிமுதல் செய்துள்ள போலீசார், குற்றவியல் சட்டம் பிரிவு 506, 427 மற்றும் 279-இன் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








