Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அணுகுமுறையைக் கண்டிப்புடன் பலப்படுத்தவுள்ளது அரசு
தற்போதைய செய்திகள்

அணுகுமுறையைக் கண்டிப்புடன் பலப்படுத்தவுள்ளது அரசு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.09-

உள்ளூர் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைத் தடுக்கவும், உயர்திறன் கொண்ட உள்நாட்டு மனிதவளத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் அரசு தனது அணுகுமுறையை கண்டிப்புடன் பலப்படுத்தவுள்ளதாக தோட்டத் தொழில், மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கனி அறிவித்துள்ளார். புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் போது, உள்ளூர் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

உள்ளூர் தொழிலாளர்கள் கிடைக்காவிட்டால், தேசிய தொழில்திறன் பயிற்சி மன்றத்தின் உதவியுடன், தொழில் துறையின் உண்மையான தேவைக்கேற்ப பயிற்சிப் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். இந்த உறுதியான நடவடிக்கையானது, TVET திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட திறமையான இளைஞர்களுக்குச் சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்து, நாட்டிற்கு மிகப் பெரிய பலன்களை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்