பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல், இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அரிசி விநியோகம் மற்றும் அரிசி விலையேற்றம் தொடர்பாகவே அதிகமாக விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பியப் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வந்த வேளையில் அப்படி ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


