Jun 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் சமூக ஊடகங்களுக்கான வயது சரிபார்ப்பு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் சமூக ஊடகங்களுக்கான வயது சரிபார்ப்பு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

மலேசியாவில் சமூக ஊடகக் கணக்குகளின் பதிவு மற்றும் அதனைப் பயன்படுத்துவதில் புதிய வயது சரிபார்ப்பு விதிகள் இன்று ஜூன் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.

இந்த நடவடிக்கையானது, சிறார் பாதுகாப்பு குறியீடான CPC மற்றும் அபாயக் குறைப்பு குறியீடான RMC ஆகியவற்றின் அமலாக்கத்துடன் இணைந்து, புதிய இணைய பாதுகாப்பு சட்டம் 2025 -இன் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி MCMC நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் படி, 16 வயதிற்குட்பட்டவர்கள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சமூக ஊடகக் கணக்கை உருவாக்க விரும்புவோர் மைகாட், கடப்பிதழ் அல்லது மைடிஜிட்டல் ஐடி MyDigital ID போன்ற அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களை வழங்கி வயது சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விதி புதிய கணக்குகளுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள கணக்குகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது அடையாளத்தை மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கையால், சமூக ஊடகங்களில் சிறார்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதுடன், தவறான பயன்பாடுகளைப் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

16 வயதிற்குட்பட்டவர்கள் தரவுகளை சேமித்துக் கொள்ள 1 மாத கால அவகாசம் - எம்சிஎம்சி அறிவிப்பு

16 வயதிற்குட்பட்டவர்கள் தரவுகளை சேமித்துக் கொள்ள 1 மாத கால அவகாசம் - எம்சிஎம்சி அறிவிப்பு

மலையேற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - டான் ஶ்ரீ லீ லாம் தை வலியுறுத்தல்

மலையேற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - டான் ஶ்ரீ லீ லாம் தை வலியுறுத்தல்

வெளிநாட்டினரின் வாகனங்களுக்குப் பாதுகாப்பா? - டிக் டாக் வைரல் காணொளி குறித்து மலாக்கா போலீஸ் விளக்கம்

வெளிநாட்டினரின் வாகனங்களுக்குப் பாதுகாப்பா? - டிக் டாக் வைரல் காணொளி குறித்து மலாக்கா போலீஸ் விளக்கம்

அம்பாங்கில் 13 வது மாடியிலிருந்து விழுந்த 9 வயது சிறுவன் மரணம்

அம்பாங்கில் 13 வது மாடியிலிருந்து விழுந்த 9 வயது சிறுவன் மரணம்

ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் 'மலேசியர்' என அழைக்கத் தகுதியற்றவர்கள்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தல்

ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் 'மலேசியர்' என அழைக்கத் தகுதியற்றவர்கள்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தல்

22 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மைகாட் அறிமுகம்: 53 பாதுகாப்பு அம்சங்களுடன் இம்மாதம் அமலுக்கு வருவதாக தேசிய பதிவிலாகா அறிவிப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மைகாட் அறிமுகம்: 53 பாதுகாப்பு அம்சங்களுடன் இம்மாதம் அமலுக்கு வருவதாக தேசிய பதிவிலாகா அறிவிப்பு

மலேசியாவில் சமூக ஊடகங்களுக்கான வயது சரிபார்ப்பு விதிகள் இ... | Thisaigal News