Jun 1, 2026
Thisaigal NewsYouTube
16 வயதிற்குட்பட்டவர்கள் தரவுகளை சேமித்துக் கொள்ள 1 மாத கால அவகாசம் - எம்சிஎம்சி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

16 வயதிற்குட்பட்டவர்கள் தரவுகளை சேமித்துக் கொள்ள 1 மாத கால அவகாசம் - எம்சிஎம்சி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சமூக ஊடகப் பயனர்கள் தங்களது புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட தரவுகளைப் பாதுகாத்து மாற்றிக் கொள்ள, ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி MCMC அறிவித்துள்ளது.

இந்த 1 மாத கால அவகாசத்திற்குப் பின்னர், அவர்களது கணக்குகள் கட்டுப்படுத்தப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது பிற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், தற்போதுள்ள சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்க்க, சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுக்கு ஆறு மாத இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், CPC விதிமுறைகளின் கீழ் உரிமம் பெற்ற சமூக ஊடக தளங்கள், குழந்தைகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட அம்சங்களை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்றும், வயதுக்கு ஏற்ற பாதுகாப்பு வசதிகளை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஜூன் 1 -ஆம் தேதி முதல், உரிமம் பெற்ற சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, புதிய கணக்குகளைத் தொடங்கவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற அம்சங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும் எம்சிஎம்சி உத்தரவிட்டுள்ளது.

Related News

மலையேற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - டான் ஶ்ரீ லீ லாம் தை வலியுறுத்தல்

மலையேற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - டான் ஶ்ரீ லீ லாம் தை வலியுறுத்தல்

வெளிநாட்டினரின் வாகனங்களுக்குப் பாதுகாப்பா? - டிக் டாக் வைரல் காணொளி குறித்து மலாக்கா போலீஸ் விளக்கம்

வெளிநாட்டினரின் வாகனங்களுக்குப் பாதுகாப்பா? - டிக் டாக் வைரல் காணொளி குறித்து மலாக்கா போலீஸ் விளக்கம்

அம்பாங்கில் 13 வது மாடியிலிருந்து விழுந்த 9 வயது சிறுவன் மரணம்

அம்பாங்கில் 13 வது மாடியிலிருந்து விழுந்த 9 வயது சிறுவன் மரணம்

ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் 'மலேசியர்' என அழைக்கத் தகுதியற்றவர்கள்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தல்

ருக்குன் நெகாரா கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் 'மலேசியர்' என அழைக்கத் தகுதியற்றவர்கள்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தல்

மலேசியாவில் சமூக ஊடகங்களுக்கான வயது சரிபார்ப்பு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது

மலேசியாவில் சமூக ஊடகங்களுக்கான வயது சரிபார்ப்பு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது

22 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மைகாட் அறிமுகம்: 53 பாதுகாப்பு அம்சங்களுடன் இம்மாதம் அமலுக்கு வருவதாக தேசிய பதிவிலாகா அறிவிப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மைகாட் அறிமுகம்: 53 பாதுகாப்பு அம்சங்களுடன் இம்மாதம் அமலுக்கு வருவதாக தேசிய பதிவிலாகா அறிவிப்பு