Jul 30, 2026
Thisaigal NewsYouTube
8,655 முதலீட்டு மோசடி சம்பவங்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

8,655 முதலீட்டு மோசடி சம்பவங்கள் பதிவு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-

மலேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் முதலீட்டு மோசடி; மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்

கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை நாட்டில், 875.4 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தி மொத்தம் 8 ஆயிரத்து 655 முதலீட்டு மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐயாயிரத்து 724 பேர் கடந்த ஜூலை மாதம் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நாட்டில் முதலீட்டு மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்தி வருவதால், மக்கள் பேராசையினால் இணையம் வாயிலாக அனுப்பபடும் செய்திகளை நம்பி பணத்தை அளித்து ஏமாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மலேசிய பாதுகாப்பு ஆனையம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா என்று போர்வையில், பல இணைய முதலீட்டு மோசடிகள் பதிவாகியிருப்பதையும் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, சந்தேகத்திற்குரிய முதலீட்டுச் சலுகைகள் ஏதேனும் கிடைத்தால் முதலில் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை