Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், செப்டம்பஎ.24-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்குச் சொந்தமானவை என்று சந்தேகிக்கப்படும் சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆராயத் தொடங்கியுள்ளது.

துன் மகாதீரின் சொத்துகள் தொடர்பில் எஸ்பிஆர்எம் ஒரு நாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, பிற தொடர்புடைய நாடுகளின் தகவல்களையும் ஆராய்ந்து வருவதாக அதனை தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் உள்ள சொத்துகளும் ஆராயப்படுகின்றன. குறிப்பாக சுவிட்சர்லாந்து போன்ற பிற நாடுகளிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் இங்கிலாந்தைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளில் எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருகிறது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அஸாம் பாக்கி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

எனினும் துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் அஸாம் பாக்கி மேல் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து