தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பின் அந்திமகால சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கியில் தனி நபர் கடனைப் பெறுவதற்கு அனுமதியளித்திருக்கும் அந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து இன்று ஆட்சேப போராட்டம் நடைபெற்றது.
கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள இபிஎப். தலைமையகத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ்.சசிகுமார் தலைமையில், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொருப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், இபிஎப். சேமிப்பைப் பிணையாக பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது, சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


