Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி பெசாராக அமிருடின் ஷாரின் பெயரை பிகேஆர் முன்மொழிவில்லை
தற்போதைய செய்திகள்

மந்திரி பெசாராக அமிருடின் ஷாரின் பெயரை பிகேஆர் முன்மொழிவில்லை

Share:

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவிக்கு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரியின் பெயரை பிகேஆர் கட்சி முன்மொழியவில்லை என்று அதன் முன்னாள் துணைத் தலைவரும், பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இன்று அம்பலப்படுத்தினார்.
“சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக பொறுப்பு வகித்து வந்துள்ளேன் என்ற முறையில் மாநிலத்தின் புதிய மந்திரி புசார் பதவிக்கு என்னுடைய மற்றும் சிலாங்கூர் மாநில அரசின் தேர்வு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரியே என்று கூறி அவரின் பெயரை இஸ்தானாவிற்கு முன்மொழிந்தது நானே” என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்றத் தேர்தல் மாநாட்டில் உரையாற்றுகையில் அஸ்மின் அலி, இதனை தெரிவித்தார்.
இன்று வேண்டுமானால் அமிருடின், தனது புதிய நட்பு வட்டாரத்துடன் இணைந்து இருக்கலாம். ஆனால், மந்திரி புசார் பதவிக்கு அவரின் பெயரை இஸ்தானாவிற்கு முன்மொழிந்தது தாமே என்பது வரலாறாகும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார். பெரும் திரளாக உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டிற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சிறப்பு வருகை புரிந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!