May 21, 2026
Thisaigal NewsYouTube
ஸூக்கி அலியை எம்ஏசிசி விசாரிக்கவில்லை !
தற்போதைய செய்திகள்

ஸூக்கி அலியை எம்ஏசிசி விசாரிக்கவில்லை !

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
தேசிய அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஸூக்கி அலியை மலேசிய லஞ்ச ஊழல் ஆணையம் விசாரிக்க வில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், ஸூக்கி அலி தற்போது எம் ஏ சி சி யால் விராசிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது. அந்தத் தகவலில் உண்மையில்லை என எம் ஏ சி சி யின் தலைவர் அஸாம் பாக்கி விளக்கமளித்துள்ளார்.

டுவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்ட X தளத்தில் வெளியான தகவலின்படி, ஸூக்கி எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்டு வருவதாக ஸூக்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பதிவில், ஸூக்கியைத் தொடர்புப் படுத்தி, சில நியாயமற்றக் குற்றச்சாட்டுகளும் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவை விசாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

தற்போது வரையில், ஸூக்கியின் தரப்பில் இருந்து எந்தவித பதிவு விளக்கமும் அளிக்கப்பட வில்லை.

Related News